/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் செடி வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
கால்வாயில் செடி வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் செடி வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் செடி வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : ஜூலை 06, 2025 01:18 AM

திருப்புட்குழி:திருப்புட்குழி ஊராட்சி, புதுாரில் வடிகால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்புட்குழி ஊராட்சி, புதுார் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் உள்ளது.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.
இதனால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள் புதுாரில் உள்ள மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க, திருப்புட்குழி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

