sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் 129 மனுக்கள் மீது உடனடி தீர்வு

/

ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் 129 மனுக்கள் மீது உடனடி தீர்வு

ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் 129 மனுக்கள் மீது உடனடி தீர்வு

ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் 129 மனுக்கள் மீது உடனடி தீர்வு


ADDED : நவ 09, 2024 10:06 PM

Google News

ADDED : நவ 09, 2024 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், மாதந்தோறும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும் பொதுவினியோக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நவ., மாதத்திற்கான பொது வினியோக குறைதீர் கூட்டம், ஐந்து தாலுகாவிலும் நேற்று நடந்தது.

இதில், காஞ்சிபுரம் தாலுகாவில் குண்டுகுளம் கிராமம், உத்திரமேரூரில் திணையாம்பூண்டி, வாலாஜாபாதில் நத்தாநல்லுார், ஸ்ரீபெரும்புதுாரில் மொளச்சூர், குன்றத்துாரில் மணிமங்கலம் என, ஐந்து தாலுகாவிலும் நடந்த பொதுவினியோக குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.

இதில், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் என, மாவட்டம் முழுதும் ஐந்து தாலுகாவிலும், 145 மனுக்கள் வரப் பெற்றன. இதில், தகுந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட 129 மனுக்கள் மீது குறைதீர் கூட்டத்தில் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

மீதமுள்ள 16 மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us