sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செங்கழுநீரோடை வீதி டாஸ்மாக் அகற்றப்படும்: எஸ்.பி.,

/

செங்கழுநீரோடை வீதி டாஸ்மாக் அகற்றப்படும்: எஸ்.பி.,

செங்கழுநீரோடை வீதி டாஸ்மாக் அகற்றப்படும்: எஸ்.பி.,

செங்கழுநீரோடை வீதி டாஸ்மாக் அகற்றப்படும்: எஸ்.பி.,


ADDED : அக் 08, 2024 12:39 AM

Google News

ADDED : அக் 08, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில், மேட்டுத் தெரு, நெல்லுக்காரத் தெரு, ராஜாஜி மார்க்கெட் அருகில், செங்கழுநீரோடை வீதி ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வந்தன.

இதில், நெல்லுக்காரத் தெருவில் சித்ரகுப்தர் கோவில் அருகிலும், மேட்டுத் தெருவிலும் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் தொல்லையாக இருந்தன.

இதனால், இக்கடைகள் கடந்தாண்டு மூடப்பட்டன. இதையடுத்து, ராஜாஜி மார்க்கெட் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டதால், அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடைகளும் சமீபத்தில் மூடப்பட்டன.

தற்போது, செங்கழுநீரோடை வீதியில் இயங்கும் டாஸ்மாக் கடை, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது. மேலும், சட்டம் - ஒழுங்கிற்கும் பிரச்னையாக உள்ளது.

எனவே, இந்த டாஸ்மாக் கடையை அகற்ற அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், 'செங்கழுநீரோடை வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற, கலெக்டர், டாஸ்மாக் நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம். கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என, எஸ்.பி., சண்முகம் தெரிவித்து உள்ளார்.

மேலும், 'அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்றினாலே, பெரும்பாலான போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்' என்றார்.






      Dinamalar
      Follow us