/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூட்டுறவு ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
/
கூட்டுறவு ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ADDED : ஜன 22, 2026 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்::காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலக வளாகத்தில், புத்தாக்க பயிற்சி நடந்தது.
இந்த பயிற்சி முகாமிற்கு, காஞ்சி புரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் யோகவிஷ்ணு தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் சிவமலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கூட்டுறவு துறை ஊழியர்களிடையே, பணி பதிவேடு பராமரிப்பு, ஒழுங்கு நடவடிக்கை, ஆன்லைன் சர்வீஸ் புத்தகம் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டுறவு துணை பதிவாளர்கள் சரவணன், விஜயகுமார் மற்றும் கூட்டுறவு துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

