/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண்டல பால் பேட்மின்டன் போட்டி டபிள்யூ.சி.சி. - எத்திராஜ் மோதல்
/
மண்டல பால் பேட்மின்டன் போட்டி டபிள்யூ.சி.சி. - எத்திராஜ் மோதல்
மண்டல பால் பேட்மின்டன் போட்டி டபிள்யூ.சி.சி. - எத்திராஜ் மோதல்
மண்டல பால் பேட்மின்டன் போட்டி டபிள்யூ.சி.சி. - எத்திராஜ் மோதல்
ADDED : ஜன 24, 2024 10:36 PM

சென்னை:மண்டல பால் பேட்மின்டன் போட்டியில், எத்திராஜ் மற்றும் டபிள்யூ.சி.சி., அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், 'ஏ' மற்றும் 'பி' மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 'பி' மண்டல பெண்களுக்கான பால் பேட்மின்டன் போட்டி, சென்னை, கொடுங்கையூர் அடுத்த சேலவாயல் பகுதியில் உள்ள திருத்தங்கல் நாடார் கல்லுாரியில் நேற்று துவங்கியது.
போட்டியை, கல்லுாரி முதல்வர் தேவி, எத்திராஜ் கல்லுாரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் உமாதேவி உள்ளிட்டோர் துவங்கி வைத்தனர்.
போட்டியில்,'பி' மண்டலத்திற்கு உட்பட்ட எத்திராஜ், டபிள்யூ.சி.சி., - திருத்தங்கல் நாடார், நாசரத், எஸ்.எஸ்.எஸ்., ஜெயின் உள்ளிட்ட 17 அணிகள் பங்கேற்றன.
போட்டிகள் 'நாக் - அவுட்' முறையில் நடக்கின்றன. நேற்று மாலை நடந்த முதல் அரையிறுதியில், எத்திராஜ் மற்றும் நாசரத் அணிகள் மோதின. அதில், 35 - 23, 32 - 35, 35 - 27 என்ற கணக்கில் எத்திராஜ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
மற்றொரு அரையிறுதியில், டபிள்யூ.சி.சி., - எஸ்.ஏ., அணிகள் விளையாடின. விறுவிறுப்பான போட்டியில், 35 - 23, 35 - 27 என்ற கணக்கில் டபிள்யூ.சி.சி., அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.