sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெண் கொலை உறவினர்கள் சாலை மறியல்

/

பெண் கொலை உறவினர்கள் சாலை மறியல்

பெண் கொலை உறவினர்கள் சாலை மறியல்

பெண் கொலை உறவினர்கள் சாலை மறியல்


ADDED : ஜூலை 07, 2025 12:47 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பெண்ணை அடித்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த, ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ஹெப்சிபா மேரி, 41; அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தலை உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த, பொன்னேரிக்கரை போலீசார், ஹெப்சிபா மேரி உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலைக்கு காரணமானவர்கள் மீது, இறந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று, பகல் 1:30 மணிக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த, விஷ்ணு காஞ்சி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பகல் 2:10 மணிக்கு உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இருப்பினும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு முன் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us