sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

காஞ்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காஞ்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காஞ்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : செப் 20, 2024 12:26 AM

Google News

ADDED : செப் 20, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மடம் தெரு பகுதியில் மஞ்சள்நீர் கால்வாயின் கிளை கால்வாய் செல்கிறது. இக்கால்வாய் மீது இரும்பு கம்பிகளை வெல்டிங் வைத்தும், அருகில் உள்ள மாநகராட்சி இடத்தையும் இணைத்து அந்த இடத்தை, சில ஆண்டுகளுக்கு முன்பாக, சிலர் ஆக்கிரமித்தனர். பின், உணவகமாக மாற்றி கடை நடத்தி வந்தனர்.

கால்வாய் மற்றும் மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் அமைச்சர் பங்கேற்ற குறைதீர் கூட்டத்தில் சிலர் புகார் மனு அளித்தனர்.

இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் ஒன்றிணைந்து, மடம் தெருவில் ஆக்ரமிப்பில் இருந்த கால்வாய் மற்றும் மாநகராட்சி இடத்தை பொக்லைன் இயந்திரம் வாயிலாக, அங்கிருந்த கடையை இடித்து அந்த இடத்தை மீட்டனர்.

இதேபோல, மேட்டுத் தெருவில் கால்வாய் நீர்வழித் தடத்தை ஆக்கிரமித்து புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us