sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒரகடம் மேம்பாலத்தின் மீது மண் குவியல் அகற்றம்

/

ஒரகடம் மேம்பாலத்தின் மீது மண் குவியல் அகற்றம்

ஒரகடம் மேம்பாலத்தின் மீது மண் குவியல் அகற்றம்

ஒரகடம் மேம்பாலத்தின் மீது மண் குவியல் அகற்றம்


ADDED : ஜூலை 04, 2025 01:18 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் மேம்பாலத்தின் இருபுறமும் குவிந்துள்ள மண் குவியலை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.

ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரகடத்தில் மேம்பாலம் உள்ளது. வாலாஜாபாத், காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும், தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்கள் இரவு, பகலாக சென்று வருகின்றன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த மேம்பாலத்தின் இருபுறங்களிலும், அதிக அளவு மண் குவிந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலைத் தடுமாறி விபத்தில் சிக்கி வந்தனர்.

இதனால், மேம்பாலத்தின் மீது தேக்கமடைந்துள்ள மண் குவியலை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலத்தின் மீது இருந்த மண் குவியலை அகற்றி சீரமைத்தனர்.






      Dinamalar
      Follow us