sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் கோவிலில் ரூ.1 கோடியில் புதுப்பிக்கும் பணி

/

 கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் கோவிலில் ரூ.1 கோடியில் புதுப்பிக்கும் பணி

 கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் கோவிலில் ரூ.1 கோடியில் புதுப்பிக்கும் பணி

 கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் கோவிலில் ரூ.1 கோடியில் புதுப்பிக்கும் பணி


ADDED : நவ 23, 2025 01:55 AM

Google News

ADDED : நவ 23, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: கருவேப்பம்பூண்டியில், விஸ்வநாதர் கோவிலை , 1.14 கோடி ரூபாயில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

உத்திரமேரூர் தாலுகா, கருவேப்பம்பூண்டி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான இக்கோவில் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இங்கு, மாசிமகம், சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். இந்த கோவில் முறையாக பராமரிப்பு இல்லாததால், மூலவர் சன்னிதி, அம்பாள் சன்னிதி, உப சன்னிதிகள், மகா மண்டபம், சுற்றுச்சுவர் ஆகியவை சிதிலமடைந்து இருந்தன.

இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த, பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், கோவில் பொதுநிதியின் கீழ், 1.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள், எட்டு மாதத்திற்கு முன் துவங்கி நடந்து வருகின்றன.

கோவிலை பழமை மாறாமல் மூலவர் சன்னிதி, மகா சன்னிதி, அம்பாள் சன்னிதி ஆகியவை கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இது குறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் கோவில் புதுப்பிக்கும் பணி மூன்று மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.






      Dinamalar
      Follow us