sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரத்தில் போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை

/

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரத்தில் போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரத்தில் போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரத்தில் போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை


ADDED : டிச 05, 2024 11:38 PM

Google News

ADDED : டிச 05, 2024 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்,வாலாஜாபாத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை உள்ளது.இச்சாலை வழியாக ஊத்துக்காடு, கட்ட வாக்கம்,தென்னேரி, மஞ்சமேடு, அய்மிச்சேரி, குண்ணம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள்உள்ளன.

இக்கிராமங்களைச் சேர்ந்தோர், தினமும் சுங்குவார்சத்திரம், வாலாஜா பாத், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

மேலும், இச்சாலையொட்டி உள்ள பல்வேறு கிராமங்களில், தனியார்தொழிற்சாலைகள்இயங்குகின்றன.

அத்தொழிற்சாலைகளில், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில் உள்ள கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இரவு, பகல் என, 'ஷிப்ட்'முறையில் பணியாற்று கின்றனர்.

இரவு நேரங்களில்,இச்சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் சென்று வரும் தொழிலாளர்களுக்கு, சமூக விரோதிகளின் அச்சுறுத்தல்இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத சாலை பகுதிகளில், மர்ம நபர்கள் சுற்றி திரிவதால் இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் போது அச்சத்தைஏற்படுத்துவதாகதொழிலாளர்கள் கூறி வருகின்றனர்.

எனவே, வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில், இரவு நேரங்களில், போக்குவரத்து ரோந்து வாகனம் அமைத்து, போலீசார் கண்காணிப்பில் இருக்க அப்பகுதியைச் சேர்ந்த பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us