/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சித்தாத்துார் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
/
சித்தாத்துார் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
சித்தாத்துார் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
சித்தாத்துார் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : மே 09, 2025 12:56 AM
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியம், இளையனார் வேலுார் ஊராட்சிக்கு உட்பட்டது சித்தாத்துார் கிராமம்.
இந்த கிராமத்திற்கான மயானமாக அப்பகுதி செய்யாற்றங்கரையில் உள்ளது. இதில் ஒரு பகுதியை அப்பகுதியினர் கடந்த பல ஆண்டுகளாக பயன் படுத்தி வருகின்றனர்.
இந்த மயான பகுதியில்,தண்ணீர் வசதி, காத்திருப்போர் இருப்பிடம், மின் விளக்கு மற்றும் மயானத்திற்கு செல்வதற்கான பாதை வசதி, சுற்றுசுவர் போன்ற எந்த வித வசதிகளும் இல்லை.
மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால், சடலங்களை மயானத்திற்கு வாகனங்களால் கொண்டு செல்ல செல்ல முடியவில்லை.
எரிமேடை உள்ளிட்ட கட்டட வசதிகள் இல்லாததால், மழை நேரங்களில் சடலங்களை எரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, சித்தாத்துார் மயானத்திற்கு பாதை மற்றும் சுற்று சுவர், எரிமேடை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.