sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

/

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு


ADDED : பிப் 16, 2024 11:17 PM

Google News

ADDED : பிப் 16, 2024 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி:ஆவடி அடுத்த பூந்தமல்லி, ராமானுஜம் கூடம் தெருவில், தனியார் மகளிர் விடுதி உள்ளது.

இதையொட்டிய குப்பை தொட்டியில் இருந்து, நேற்று காலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

அதன் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் யுவராணி, 33, என்பவர், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது, குப்பை தொட்டியில் தொப்புள் கொடியுடன் பிறந்து சில மணி நேரமே ஆன, பெண் குழந்தை கிடந்தது.

எறும்புகள் மொய்த்த நிலையில், வலி தாங்காமல் குழந்தை கதறி அழுது சோர்ந்து போயிருந்தது.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அங்கு சென்ற யுவராணி குழந்தையை மீட்டார்.

அதன் பின், அந்த குழந்தைக்கு பூந்தமல்லி அரசு மருத்துவமனையிலும், அதை தொடர்ந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார், குழந்தை மீட்கப்பட்ட இடத்திற்கு சென்று, குழந்தையை வீசியது யார் என்பது குறித்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக விசாரித்து வருகின்றனர்.

இரக்கமின்றி, குப்பை தொட்டியில் வீசப்பட்டு, உயிருக்கு போராடி மீண்ட குழந்தைக்கு, அதை மீட்ட யுவராணி, 'அதிர்ஷ்டலட்சுமி' என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.






      Dinamalar
      Follow us