sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மழைநீர் வடிகால்வாய் மாயம் களக்காட்டூர் வாசிகள் அதிருப்தி

/

மழைநீர் வடிகால்வாய் மாயம் களக்காட்டூர் வாசிகள் அதிருப்தி

மழைநீர் வடிகால்வாய் மாயம் களக்காட்டூர் வாசிகள் அதிருப்தி

மழைநீர் வடிகால்வாய் மாயம் களக்காட்டூர் வாசிகள் அதிருப்தி


ADDED : பிப் 09, 2024 11:09 PM

Google News

ADDED : பிப் 09, 2024 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

களக்காட்டூர்:காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் பெய்யும் மழைநீர், ராமாபுரம் தெரு, மேட்டுத்தெரு, அரசு நடுநிலைப் பள்ளி பின்பக்கம் வழியாக, வேளியூர் ஏரிக்கு செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், ஆங்காங்கே மண் துகள்களாலும், செடி, கொடிகளாலும், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்து உள்ளது.

இதனால், மழை காலத்தில் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி, சாகுபடி செய்துள்ள பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளது. மேலும், குடியிருப்புகளை மழைநீர் சூழும் நிலை உள்ளது.

எனவே, களக்காட்டூர் கிராமம், ராமாபுரம் தெருவில் இருந்து வேளியூர் ஏரிக்கு மழைநீர் செல்லும் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி, மண் கால்வாய் உள்ள பகுதியில், கான்கிரீட் கால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us