sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆற்றங்கரையோர சாலைக்கு தடுப்புச்சுவர் அமைப்பு

/

ஆற்றங்கரையோர சாலைக்கு தடுப்புச்சுவர் அமைப்பு

ஆற்றங்கரையோர சாலைக்கு தடுப்புச்சுவர் அமைப்பு

ஆற்றங்கரையோர சாலைக்கு தடுப்புச்சுவர் அமைப்பு


ADDED : பிப் 14, 2025 12:12 AM

Google News

ADDED : பிப் 14, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்ட்ரேட் பின்புறம் உள்ள எம்.ஜி.ஆர்., நகர் பிரதான சாலையோரம் வேகவதி ஆறு செல்கிறது. சாலையின் தரைமட்டத்தில் இருந்து இரண்டு அடி ஆழத்திற்கும் மேல் உள்ள வேகவதி ஆற்றங்கரைக்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் இருந்தது.

இதனால், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், போதுமான மின்விளக்கு இல்லாத பகுதியில் கனரக வாகனத்திற்கு வழிட ஒதுங்கும்போது, தடுப்புச்சுவர் இல்லாத வேகவதி ஆற்றில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, எம்.ஜி.ஆர்., நகர் பிரதான சாலையை ஒட்டியுள்ள வேகவதி ஆற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், எம்.ஜி.ஆர்., நகர் சாலையை ஒட்டியுள்ள வேகவதி ஆற்றங்கரைக்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us