/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அய்யன்பேட்டையில் ரதசப்தமி தேரோட்டம் விமரிசை
/
அய்யன்பேட்டையில் ரதசப்தமி தேரோட்டம் விமரிசை
ADDED : பிப் 16, 2024 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, அய்யன்பேட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் ரத சப்தமிக்கு தேரோட்டம் நடைபெறும்.
நேற்று ரதசப்தமி விழாவை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, காலை 7:00 மணி அளவில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடேச பெருமாள் மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர், முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தன.