ADDED : நவ 17, 2025 08:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்: பினாயூரில், 9.21 லட்சம் ரூபாயில் புதிய நெற்களம் அமைக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூர் ஊராட்சியில், 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
ஒவ்வொரு நெல் அறுவடை பருவத்தின்போது அப்பகுதி விவசாயிகள், நெல்லை உலர்த்த போதிய நெற்கள வசதி இல்லாமல் இருந்தனர்.
இதனால், விவசாயிகள் நெல்லை உலர்த்த, கூடுதலாக நெற்கள வசதி ஏற்படுத்த, ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2025 --- 26ம் நிதி ஆண்டில், கனிம வள திட்டத்தின் கீழ், 9.21 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது, கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, நெற்களம் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. கூடுதலாக நெற்களம் அமைக்கப்பட்டுள்ளதால் பினாயூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

