sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புதிய தார் சாலையில் பள்ளம் அரைகுறை தடுப்பால் விபத்து அபாயம்

/

புதிய தார் சாலையில் பள்ளம் அரைகுறை தடுப்பால் விபத்து அபாயம்

புதிய தார் சாலையில் பள்ளம் அரைகுறை தடுப்பால் விபத்து அபாயம்

புதிய தார் சாலையில் பள்ளம் அரைகுறை தடுப்பால் விபத்து அபாயம்


ADDED : அக் 05, 2024 12:26 AM

Google News

ADDED : அக் 05, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகரும்பூர்:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழி சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

தற்போது, காஞ்சிபுரம் - பரமேஸ்வரமங்கலம் கிராமம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தார் சாலை போடாத இடத்தில், எம்.சாண்ட் கொட்டி சிமென்ட் கற்களை அடுக்கி, சாலையின் இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

இதில், பெரியகரும்பூர் கேட் அருகே, மழைநீர் வடி கால்வாய் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், லேசான மழைக்கு செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் வழித்தடம் ஓரம், மழைநீர் தேங்கி நிற்கிறது.

இந்த தண்ணீரை வெளியேற்றும் விதமாக, புதிதாக போடப்பட்ட சாலை சேதப்படுத்தி, புதிய மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தும் பணி துவக்கி உள்ளனர்.

புதிய தார் சாலையில், அதிக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, பெரிய கரும்பூர் பகுதியில் வேகத்தை குறைத்து செல்லும் போது, புதிதாக தோண்டிய பள்ளம் அருகே, அரைகுறையாக தடுப்பு போடப்பட்டு உள்ளதால், வாகனங்கள் கவிழும் நிலை உள்ளது.

எனவே, சேதம் ஏற்படுத்திய பகுதியில், எச்சரிக்கை சாதனங்களை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us