sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேகத்தடை இல்லாததால் விபத்து நடக்கும் அபாயம்

/

வேகத்தடை இல்லாததால் விபத்து நடக்கும் அபாயம்

வேகத்தடை இல்லாததால் விபத்து நடக்கும் அபாயம்

வேகத்தடை இல்லாததால் விபத்து நடக்கும் அபாயம்


ADDED : பிப் 12, 2024 06:00 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் இருந்து, கீழம்பி வழியாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும், 5 கி.மீ., பிரதான இணைப்பு சாலை உள்ளது.

இந்த சாலையில், சிறுகாவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அலுவலகம், காதி கிராம தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.மேலும், தனியார் கல்லுாரிகளும் இயங்கி வருகின்றன.

இந்த பல்வேறு அலுவலகத்திற்கு செல்லும் கிராமம் மற்றும் நகர மக்கள் பிரதான சாலையை கடக்க முடியவில்லை.

இந்த சாலை செல்லும் வாகனங்கள், அசுர வேகத்தில் செல்வதால், அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. கடந்த மாதத்தில், நடந்த இரு விபத்துகளில் இருவர் பலியாகி உள்ளனர்.

எனவே, சிறுகாவேரிபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம், ஒலிமுகமதுபேட்டை மின் வாரிய அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்களின் எதிரே வேகத்தடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us