sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையை சேதப்படுத்தும் லாரியை தடுத்து நிறுத்தி முற்றுகை

/

சாலையை சேதப்படுத்தும் லாரியை தடுத்து நிறுத்தி முற்றுகை

சாலையை சேதப்படுத்தும் லாரியை தடுத்து நிறுத்தி முற்றுகை

சாலையை சேதப்படுத்தும் லாரியை தடுத்து நிறுத்தி முற்றுகை


ADDED : ஜூலை 29, 2025 12:20 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூரில் சாலையை சேதப்படுத்தும் லாரியை தடுத்து நிறுத்தி டாக்டர் எம்.ஜி.ஆர்., நகர மக்கள் முற்றுகையிட்டனர்.

உத்திரமேரூர் பேரூராட்சி, டாக்டர் எம்.ஜி.ஆர்., நகரில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, பிரதான சாலையை பயன்படுத்தி, அப்பகுதியில் வசிப்போர் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் செல்கின்றனர்.

இந்நிலையில், இங்குள்ள ஏரி நீர்வரத்து கால்வாய் அருகே, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் வீட்டுமனை பிரிவுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, வீட்டுமனை பிரிவுகள் அமைக்கும் இடத்தினை சமன்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

அதற்காக, அங்குள்ள பிரதான சாலையின் மீது லாரிகளில் மண் கொண்டு வரப்படுகிறது. அதிக பாரத்துடன் லாரிகள் தொடர்ந்து செல்லும்போது, சாலை சேதமடைந்து வருகிறது.

எனவே, அப்பகுதியில் வசிப்போர் அதிக பாரத்துடன் மண் ஏற்றிவரும் லாரிகளை, பிரதான சாலை வழியாக வரக்கூடாது என்றுகூறி, லாரியை தடுத்து நிறுத்தி நேற்று முற்றுகையிட்டு, ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சார்பில் புதிதாக சாலை அமைக்கப்படும் என்று கூறியதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us