sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஊரடங்கில் போடப்பட்ட தடுப்புகளால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு

/

ஊரடங்கில் போடப்பட்ட தடுப்புகளால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு

ஊரடங்கில் போடப்பட்ட தடுப்புகளால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு

ஊரடங்கில் போடப்பட்ட தடுப்புகளால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு


ADDED : ஜன 19, 2025 02:53 AM

Google News

ADDED : ஜன 19, 2025 02:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், கொரோனா ஊரடங்கின்போது காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளில், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக, சாலை தடுப்பு அமைக்கப்பட்டது.

ஆனால், ஊரடங்கு தளர்வுக்கு பின், பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட சாலை தடுப்புகள் முழுமையாக அகற்றப்படாமல் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

குறிப்பாக, கிழக்கு ராஜ வீதியில் இருந்து, சங்குபாணி விநாயகர் கோவில் தெருவிற்கு செல்லும் சாலை நுழைவு பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்புகள் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது.

இதனால், இச்சாலை வழியாக உலகளந்த பெருமாள், காமாட்சியம்மன், அபிராமீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களுக்கு கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர், சாலை வளைவு பகுதியில் வாகனத்தை திருப்புவதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சங்குபாணி விநாயகர் கோவில் தெரு நுழைவாயிலில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலை தடுப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us