/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
/
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
ADDED : டிச 28, 2024 01:20 AM

குன்றத்துார்:குன்றத்துார்- - போரூர் நெடுஞ்சாலையில், மவுலிவாக்கம் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள கடைகள், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதனால், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுதொடர்பாகபதிவான புகார்களை அடுத்து, வருவாய் துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர். இதில், 31 கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய்துறை சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் சரவண கண்ணன் தலைமையில் வருவாய் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாங்காடு போலீசார், ஆக்கிரமிப்பு கடைகளை 'பொக்லைன்' இயந்திரத்தால் இடித்து அகற்றும் பணியை நேற்று துவக்கினர்.
இந்த நிலையில், கடைகளை இடிக்க சிலர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஆணை பெற்றனர். இதனால், நான்கு கடைகளின் ஆக்கிரமிப்புகள் மட்டும், நேற்று அகற்றப்பட்டன.
வழக்கு விசாரணை முடிந்த பின், எஞ்சியுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்படும் என, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.