/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் மண் குவியல் ஒரகடம் சாலையில் அபாயம்
/
சாலையோரம் மண் குவியல் ஒரகடம் சாலையில் அபாயம்
ADDED : பிப் 02, 2025 12:34 AM

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத், சென்னை -- திருச்சி, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக. ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது.
ஒரகடம், வல்லம் - வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன.
வாகன போக்குவத்து அதிகம் நிறைந்த இச்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த தெரேசாபுரம் அருகே, சாலையின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூறாக மண் குவியல் உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மண்குவியலில் சிக்கி, நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள மண் குவியல்களை அகற்றி, சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.