sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

152 விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

/

152 விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

152 விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

152 விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்


ADDED : செப் 03, 2025 02:08 AM

Google News

ADDED : செப் 03, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், கடந்த ஆகஸ்ட் மாதம், வாகன தணிக்கை செய்து, விதிமீறிய 152 வாகனங்களுக்கு, ஒரே மாதத்தில், 22 லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

இதில், விதி மீறி அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள், தகுதிச் சான்று புதுப்பிக்காத, ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத, தார்பாலின் மூடாத, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் வாகனங்கள் என, விதி மீறி இயக்கிய 152 வாகனங்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டன.

இந்த வாகனங்களுக்கு, ஒரே மாதத்தில், 22 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

விதியை மீறும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us