sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஊரக வளர்ச்சி உதவியாளர் வரும் 22, 23ல் நேர்காணல்

/

ஊரக வளர்ச்சி உதவியாளர் வரும் 22, 23ல் நேர்காணல்

ஊரக வளர்ச்சி உதவியாளர் வரும் 22, 23ல் நேர்காணல்

ஊரக வளர்ச்சி உதவியாளர் வரும் 22, 23ல் நேர்காணல்


ADDED : அக் 18, 2025 10:33 PM

Google News

ADDED : அக் 18, 2025 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: ஊரக வளர்ச்சி துறையில், ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, வரும் 22, 23ம் தேதிகளில், நேர்காணல் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இதில், காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், இரண்டு அலுவலக உதவியாளர்கள்; குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் ஆகிய மூன்று வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், தலா, ஒரு அலுவலக உதவியாளர் என, மொத்தம், ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

அந்த ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, 725 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 117 விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தவில்லை.

அதனால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதி, 608 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கு, வரும் 22, 23ம் தேதிகளில் நேர்காணல் நடைபெற உள்ளது.

இதில், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய தலைவர், துணை தலைவர் ஆகியோர் நேர்காணல் நடத்த உள்ளனர்.






      Dinamalar
      Follow us