/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பங்காரு அம்மன் தோட்டத்தில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
/
பங்காரு அம்மன் தோட்டத்தில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
பங்காரு அம்மன் தோட்டத்தில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
பங்காரு அம்மன் தோட்டத்தில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 05, 2024 12:19 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, பங்காரு அம்மன் தோட்டம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் தினமும் வீடு வீடாக சென்று குப்பையை சேகரிக்காததால், அப்பகுதியில் சாலையோரம் உள்ள காலிமனையில் குப்பை கொட்டி வருகின்றனர்.
மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பையை அகற்றாததால், சாலையாரம் குப்பை குவியலாக உள்ளது. இறைச்சி கழிவுகள், கெட்டுப்போன உணவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பங்காரு அம்மன் தோட்டம் பகுதியில் சாலையோரம் குவியலாக உள்ள குப்பையை முழுமையாக அகற்றவும், துாய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று தினமும் குப்பையை சேகரிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.