/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி கோவில் மண்டபத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சிற்பங்கள் சேதம்
/
காஞ்சி கோவில் மண்டபத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சிற்பங்கள் சேதம்
காஞ்சி கோவில் மண்டபத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சிற்பங்கள் சேதம்
காஞ்சி கோவில் மண்டபத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சிற்பங்கள் சேதம்
ADDED : மார் 31, 2025 11:59 PM

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரதான ராஜகோபுரத்திற்கும், 16 கால் மண்டபத்திற்கும் இடையே, நான்குகால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை கன்னடியர் மண்டபம் என, அழைக்கின்றனர்.
இம்மண்டபத்தை கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், மண்டபத்தின் கூரையில் அரசமர செடிகள் வளர்ந்துள்ளன.
இச்செடிகளின் வேர்களால் நான்குகால் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாவதுடன், விரிசல் ஏற்பட்டு நாளடையில் மண்டபம் முற்றிலும் வலுவிழுந்து இடிந்து விழும் சூழல் உள்ளது.
எனவே, மண்டபத்தில் வளர்ந்து வரும் அரசமர செடிகளை வேருடன் அகற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.