sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

துணை மேயர் வசிக்கும் தெருவில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

/

துணை மேயர் வசிக்கும் தெருவில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

துணை மேயர் வசிக்கும் தெருவில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

துணை மேயர் வசிக்கும் தெருவில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு


ADDED : ஆக 27, 2025 02:34 AM

Google News

ADDED : ஆக 27, 2025 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் குமரகுருநாதன் வசிக்கும் ஆடிசன்பேட்டை தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில் கழிவுநீர் வழிந்தோடி, சுகாதார சீர்கேடுஏற்பட்டுள் ளது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவில் பின்புறம் ஆடிசன்பேட்டை தெரு உள்ளது. இந்த தெருவில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாநகராட்சி 34வது வார்டுக்கு உட்பட்ட இந்த தெருவில், 22வது வார்டில் வெற்றி பெற்று, மாநகராட்சி துணை மேயராக பதவி வகிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருநாதனின் வீடும் உள்ளது.

இந்நிலையில், துணை மேயர் வசிக்கும் இத்தெரு நுழைவாயில் பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, இரண்டு நாட்களாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், காந்தி சாலையில் செல்வோரும், வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி ஆடிசன்பேட்டை தெரு மக்களும் கழிவுநீரில் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

எனவே, காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டை தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us