/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 16, 2025 01:07 AM

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம், மீன் மார்க்கெட் அருகில், சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
பெரிய காஞ்சிபுரம் பெருமாள் தெருவில், மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இத்தெரு வழியாக, ஏகாம்பரநாதர் கோவில், புதிய ரயில் நிலையம், பொன்னேரிக்கரை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், மீன் மார்க்கெட் எதிரில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 'மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது.
சாலையோரம் மீன் வெட்டுமிடத்தில், தேங்கும் கழிவுநீரால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பெருமாள் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.