sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் நாவலுாரில் சுகாதார சீர்கேடு

/

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் நாவலுாரில் சுகாதார சீர்கேடு

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் நாவலுாரில் சுகாதார சீர்கேடு

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் நாவலுாரில் சுகாதார சீர்கேடு


ADDED : ஜன 08, 2025 09:44 PM

Google News

ADDED : ஜன 08, 2025 09:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சிக்குட்பட்ட நாவலுார் கிராமத்தில், பஜனை கோவில் தெரு, வன்னியர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.

இங்கு, கடந்த ஆண்டு, 12.45 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், மழைநீர் வடிகால் அமைக்கவில்லை.

வீடுகளில் இருந்து வெளியேறும் வீட்டு உபயோக கழிவுநீர் சாலையோரம் உள்ள திறந்த வெளி கால்வாயில் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு கடி தொல்லையில் அப்பகுதியின் அவதி அடைகின்றனர்.

மேலும், திறந்த வெளி கால்வாயில் இருந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால், பள்ளி, கல்லுாரிக்கு நடந்து செல்லும் மாணவர்கள் சிரமமடைந்தனர்.

எனவே, அப்பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேறும் வகையில் வடிகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us