/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செவிலிமேடு பாலாற்றங்கரையில் முடவன் முழுக்கு சிவபூஜை
/
செவிலிமேடு பாலாற்றங்கரையில் முடவன் முழுக்கு சிவபூஜை
செவிலிமேடு பாலாற்றங்கரையில் முடவன் முழுக்கு சிவபூஜை
செவிலிமேடு பாலாற்றங்கரையில் முடவன் முழுக்கு சிவபூஜை
ADDED : நவ 18, 2025 04:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செவிலிமேடு: காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றங்கரையில், முடவன் முழுக்கு, துலா ஸ்நானம் எனப்படும் சிவபூஜை நேற்று நடந்தது.
திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில், முடவன் முழுக்கு, துலா ஸ்நானம் எனப்படும் சிவபூஜை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டிற்கான முடவன் முழுக்கு, துலா ஸ்நானம் சிவபூஜை, நேற்று காலை 9:00 மணிக்கு, செவிலிமேடு பாலாற்றங்கரையில் நடந்தது.
இதில், சிவனடியார்கள் ஆற்று மணலில் லிங்கம் அமைத்து, மலர் அலங்காரமும், மஹா தீபாராதனையும் நடத்தினர்.

