ADDED : ஆக 20, 2025 01:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செவிலிமேடு:ஆவணி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு, அனுஷ்டானகுளம், சாலை கிணறு அருகில், ராமானுஜருக்கு என, தனி சன்னிதி உள்ளது. இங்கு ஆவணி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், மஹாதீப ஆராதனையும் நடந்தது.
தொடர்ந்து வெள்ளி கவசம் மற்றும் மலர் அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது.