sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சார் -- பதிவாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு

/

சார் -- பதிவாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு

சார் -- பதிவாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு

சார் -- பதிவாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு


ADDED : மார் 07, 2025 12:43 AM

Google News

ADDED : மார் 07, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்பதுாரில், 1.85 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட சார்- - பதிவாளர் அலுவலகத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், திருவள்ளூர் சாலையில் இயங்கி வந்த ஸ்ரீபெரும்புதுார் சார் -- பதிவாளர் அலுவலக கட்டடம் சேதமடைந்ததை அடுத்து, 1.85 கோடி ரூபாய் மதிப்பில், புதிய சார் -- பதிவாளர் அலுவலகம் கட்டடம் கட்டும் பணி, கடந்த ஆண்டு பிப்., மாதம் துவங்கியது.

ஸ்ரீபெரும்புதுார் சார் -- பதிவாளர் அலுவலகம், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட திருமங்கையாழ்வார் சாலையில் தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில், மூன்று தளங்களை கொண்ட புதிய சார் -- பதிவாளர் அலுவகத்தின், கட்டுமான பணிகள் கடந்த நவ., மாதம் நிறைவு பெற்றன.

இந்த அலுவலக கட்டடத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இதற்காக, ஸ்ரீபெரும்புதுார் புதிய சார் -- பதிவாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி தலைவர் சாந்தி, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us