/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொடி நாள் வசூலிக்க குறுஞ்செய்தி
/
கொடி நாள் வசூலிக்க குறுஞ்செய்தி
ADDED : செப் 23, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில், 93 மதுபானக் கடைகள், 42 மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. மது மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
செங்கல்பட்டு மாவட்ட டாஸ்மாக் மேற்பார்வையாளர்களின் கவனத்திற்கு என, ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடக்கிய தெற்கு மண்டலம், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் படை வீரர் கொடிநாள் வசூலாக, ஒவ்வொரு கடைக்கும், 2,000 ரூபாய் அலுவலகத்தில் வழங்கி, சலான் பெற்று செல்லலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.