ADDED : டிச 19, 2024 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே வடமங்கலத்தில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை துறை அதிகாரிகள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, உரிய ரசிது இல்லாமல் கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை பிடித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் லாரியை பறிமுதல் செய்து, லாரியின் உரிமையாளர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிக்கனி, 45, என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.