/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அறம் வளத்தீஸ்வரர் கோவிலில் 27ல் சூரசம்ஹார விழா
/
அறம் வளத்தீஸ்வரர் கோவிலில் 27ல் சூரசம்ஹார விழா
ADDED : அக் 24, 2025 10:23 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள், சூரசம்ஹார விழா நடக்கிறது.
காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகில் உள்ள அறம் வளத்தீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 22ம் தேதி துவங்கியது.
வரும் 27ம் தேதி காலை 8:00 மணிக்கு சக்திவேல் வாங்கும் நிகழ்வும், காலை 9:-00 மணிக்கு வீரவாகு காப்பு கட்டுதலும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சூரர்படை மற்றும் முருகபெருமான் வீதியுலாவை தொடர்ந்து சூரசம்ஹாரம் நடக்கிறது.
வரும் 28ம் தேதி காலை 8:00 மணிக்கு பால்குட ஊர்வலமும், மாலை 6:00 மணிக்கு சுப்ரமணியர் திருக்கல்யாண உத்சவமும், இரவு 7:00 மணிக்கு திருமண விருந்தும், 8:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.

