sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் உடைந்து போக்குவரத்து பாதிப்பு

/

சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் உடைந்து போக்குவரத்து பாதிப்பு

சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் உடைந்து போக்குவரத்து பாதிப்பு

சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் உடைந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : நவ 26, 2024 06:23 AM

Google News

ADDED : நவ 26, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில், செய்யூர் - போளூர் இடையே, சென்னை - விழுப்புரம் ரயில் தடத்தை கடக்கும் ரயில்வே கேட் உள்ளது. தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள், இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றன.

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும், இந்த தடம் வழியாகவே செல்லும்.

இந்நிலையில், நேற்று காலை 9:15 மணிக்கு, ரயில் தடத்தின் கிழக்குப் பகுதியில் இருந்த கேட் திடீரென உடைந்ததால், வாகனங்கள் ரயில்வே கேட்டை கடக்க முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கேட் உடைந்ததால், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ், ரயில்வே கேட்டை கடந்து செல்ல சிக்னல் கிடைக்காமல், சிறுநாகலுார் பகுதியில் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.

பின், சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் மேல்மருவத்துார் போலீசார், ரயில்வே கேட்டில் போக்குவரத்தை சீரமைத்த பின், சோழன் எக்ஸ்பிரஸ் கடந்து சென்றது.

தேசமடைந்த ரயில்வே கேட் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது.

திடீரென ரயில்வே கேட் உடைந்த சம்பவத்தால், 2 மணி நேரம் செய்யூர் - போளூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல, அடிக்கடி ரயில்வே கேட் உடைந்து, போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us