/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
/
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 22, 2025 01:17 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கும் ஆப்பரேட்டர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், சிறுகாவேரிபாக்கத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மற்றும் துாய்மை பாரத இயக்கம் ஊரகம் சார்பில் நடந்த இம்மருத்துவ முகாமிற்கு, திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் அருள்மொழி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் மலர் கொடி குமார் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மாவதி கோமளா, வட்டார சுகாதார ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, ரத்த அழுத்தம், சர்க்கரை, ஹீமோகுளோபின் அளவு, காசநோய் நோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், மூன்று பேருக்கு கண்புரையும், 17 பேருக்கு உயர் ரத்த அழுத்தமும் ஒருவருக்கு தோல் நோய் இருப்பதும் கண்டறியப்பட்டது.
தொடர்ந்து, மலேரியா எதிர்ப்பு தினத்தையொட்டி மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் மலேரியா ஒழிப்பு குறித்த உறுதி மொழி ஏற்றனர்.
முகாமிற்கான ஏற்பாட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் செய்திருந்தார்.