/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவ -- மாணவியருக்கு டிச., 1, 4ல் பேச்சு போட்டி
/
மாணவ -- மாணவியருக்கு டிச., 1, 4ல் பேச்சு போட்டி
ADDED : நவ 20, 2025 04:18 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான பேச்சு போட்டிகள், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், டிச., 1 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெற இருப்பதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை ஒட்டி, டிச., 1ம் தேதியன்றும், ஈ.வெ.ரா., பிறந்த நாளை ஒட்டி டிச., 4ம் தேதி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு என, தனித்தனியே பேச்சு போட்டிகள், காஞ்சிபுரம், பி.டி.வி.எஸ்., உயர் நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளன.
இப்போட்டி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு காலை 9:00 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
கல்லுாரி மாணவ - மாணவியருக்கான பேச்சு போட்டியில், கல்லுாரிக்கு 2 பேர் வீதமும், பள்ளி மாணவ - மாணவியருக்கான பேச்சு போட்டியில், பள்ளிக்கு ஒருவர் வீதமும் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.
மேலும் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவ- - மாணவியருக்கும், கல்லுாரி மாணவ - -மாணவியருக்கும் தனித்தனியே பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
மாணவர்கள் அனைத்து தலைப்புகளையும் தயார் செய்து வர வேண்டும். போட்டி நடைபெறும் நாளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் தலைப்பையொட்டி பேச வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

