sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கற்கால கருவிகள் உருவாக்கிய பட்டறை வாலாஜாபாத் அருகே கண்டுபிடிப்பு

/

கற்கால கருவிகள் உருவாக்கிய பட்டறை வாலாஜாபாத் அருகே கண்டுபிடிப்பு

கற்கால கருவிகள் உருவாக்கிய பட்டறை வாலாஜாபாத் அருகே கண்டுபிடிப்பு

கற்கால கருவிகள் உருவாக்கிய பட்டறை வாலாஜாபாத் அருகே கண்டுபிடிப்பு


ADDED : செப் 27, 2024 11:56 PM

Google News

ADDED : செப் 27, 2024 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் அருகே, கற்கால கருவிகள் உருவாக்கிய பட்டறை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் வெற்றித்தமிழன் மற்றும் பிரேம், சரண் ஆகியோர் அடங்கிய குழுவினர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொல்லியல் தடயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, வாலாஜாபாத் ஒன்றியம், நாய்க்கன்குப்பம் அருகே ஒடந்தாங்கல் ஏரியையொட்டி கள ஆய்வு நேற்று மேற்கொண்டனர்.

அப்போது, அப்பகுதியில், நிலைகளையொட்டிய பல பகுதிகளில், குவியல், குவியலாக உடைந்து சிதைந்த கற்கருவிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து, தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் வெற்றித்தமிழன் கூறியதாவது:

கற்கால மனிதர்கள், வேட்டை மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு, கற்களால் ஆன கருவிகளை பயன்படுத்தி உள்ளனர். இதற்காக நீரோடைகளையொட்டி, பல வகை கற்கள் கிடைக்கும் பகுதியில் பட்டறை அமைத்து, கற்கருவிகளை உருவாக்கினர்.

அந்த வகையில், வாலாஜாபாத் ஒன்றியம், நாய்க்கன்குப்பத்தில் இருந்து, சின்னிவாக்கம் செல்லும் சாலை, வட திசையில் உள்ள நீர்நிலைப் பகுதியில், இவ்வாறான கற்கருவிகள் உருவாக்கியதற்கான தடயங்களை கண்டறிந்து உள்ளோம்.

புதிய கற்கால மனிதர்கள் சில முழுமையான கற்கருவிகளை உருவாக்கும் போது, உடைந்து சிதறும் சில்லுகள் இந்த நீர்நிலை பகுதியில், குவியல், குவியலாக மணல் திட்டுக்கள் மீது ஆங்காங்கே பரவி காணப்படுகின்றன.

இந்த கற்கருவிகள், 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம். புதிய கற்கால மனிதர்கள் தங்களது வேளாண் சார்ந்த பயன்பாட்டிற்கும், வேட்டையாடுதல், நிலத்தை தோண்டுதல் மற்றும் கிழித்தல், வெட்டுதல் போன்றவைக்கு பல வகையான கருவிகளை உருவாக்கி பயன்படுத்தி உள்ளனர்.

கடந்த காலத்தில் இப்பகுதி மிகப்பெரிய நீர்வழி தடமாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us