sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேணுகோபால சுவாமி கருட வாகனத்தில் உலா

/

வேணுகோபால சுவாமி கருட வாகனத்தில் உலா

வேணுகோபால சுவாமி கருட வாகனத்தில் உலா

வேணுகோபால சுவாமி கருட வாகனத்தில் உலா


ADDED : செப் 02, 2024 05:57 AM

Google News

ADDED : செப் 02, 2024 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோவில் வடக்கு மாட வீதியில், யதுகுல வேணுகோபால சுவாமி பஜனை கோவில் கண்ணன் அவதார விழா கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது.

விழாவையொட்டி தினமும் காலை 8:00 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு சொற்பொழிவும், இரவு 8:00 மணிக்கு வேணுகோபால சுவாமி பலவித அலங்காரத்தில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இதில், ஐந்தாம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு, கருட வாகனத்தில் எழுந்தருளிய வேணுகோபால சுவாமி முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.

வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர். எட்டாம் நாள் விழாவான நாளை இரவு, வேணுகோபால சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி உலா வருகிறார். வரும் 6ம் தேதி காலை உறியடி உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாட்டை யகுதுல வேணுகோபால பஜனை மந்திரம் நிர்வாகக்குழு மற்றும் விழாகுழுவினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us