sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாணவ தூதுவர் பயிற்சி திட்டம் கல்லூரியில் விளக்க நிகழ்ச்சி

/

மாணவ தூதுவர் பயிற்சி திட்டம் கல்லூரியில் விளக்க நிகழ்ச்சி

மாணவ தூதுவர் பயிற்சி திட்டம் கல்லூரியில் விளக்க நிகழ்ச்சி

மாணவ தூதுவர் பயிற்சி திட்டம் கல்லூரியில் விளக்க நிகழ்ச்சி


ADDED : ஜன 11, 2024 12:35 AM

Google News

ADDED : ஜன 11, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழம்பி:தமிழ் வளர்ச்சித் துறை செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் மற்றும் காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், 'சொற்குவை' மாணவ துாதுவர் பயிற்சி திட்டம், செயல்முறை விளக்க நிகழ்ச்சி கல்லுாரியில் நடந்தது.

கல்லுாரி தமிழ்த் துறை தலைவர் முனைவர் வீரராகவன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். கல்லுாரி நிர்வாக இயக்குனர் வீரராகவன் மற்றும் சென்னை கிறிஸ்துவ கல்லுாரி பேராசிரியர் முனைவர் சதாசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல், அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குனர் முனைவர் கோ.விசயராகவன், திட்ட செயலாக்கஉரையாற்றினார்.

மாணவர்களுக்கு சொற்குவை துாதுவர் எனும் சான்றிதழும், பரிசும் வழங்கி, செந்தமிழ் தமிழ் காப்போம், செந்தமிழில் பேசுவோம் எனும் கருத்தினை வலியுறுத்தி எங்கும் தமிழ், எதிலும் தமிழ், நம்மொழி தாய்மொழி தமிழ்மொழி காப்போம் என, எடுத்துரைத்தார்.






      Dinamalar
      Follow us