/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாட்டின் மீது மோதி மாணவர் உயிரிழப்பு
/
மாட்டின் மீது மோதி மாணவர் உயிரிழப்பு
ADDED : ஜன 28, 2025 07:46 PM
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அருகே, காந்துார் கிராமம் படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கிருபா மகன் ராஜி, 16. இவர், மதுரமங்கலம் அரசு பள்ளியில் பிளஸ் 1 படிந்து வந்தார்.
கடந்த 16ம் தேதி, சகோதரர் லோகேஷ் என்பவருடன் ‛பஜாஜ் சிடி100' இருசக்கர வாகனத்தில் சுங்குவார்சத்திரத்தில் இருந்து காந்துார் சென்றார். வாகனத்தை ராஜி ஓட்டினார்.
மொளச்சூர் அருகே வந்த போது, திடீரென சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மோதி, இருவரும் கிழே விழுந்தனர். இதில், ராஜியின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. லோகேஷ் லேசான காயமடைந்தார்.
அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.