sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பள்ளி விடும் நேரத்தில் சாலையை கடக்க மாணவியர் அவதி

/

பள்ளி விடும் நேரத்தில் சாலையை கடக்க மாணவியர் அவதி

பள்ளி விடும் நேரத்தில் சாலையை கடக்க மாணவியர் அவதி

பள்ளி விடும் நேரத்தில் சாலையை கடக்க மாணவியர் அவதி


ADDED : ஜூலை 30, 2025 12:25 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், -உத்திரமேரூரில் பள்ளி விடும் நேரத்தில் சாலையை கடக்க முடியாமல் மாணவியர் அவதிபடுகின்றனர்.

உத்திரமேரூர் பேரூராட்சி, காஞ்சிபுரம் செல்லும் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1,200 மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு வரும் மாணவியர் தினமும் நடந்தும், சைக்கிளிலும் வந்து செல்கின்றனர். இதில், நடந்து வரும் மாணவியர், காஞ்சிபுரம் செல்லும் சாலையை கடந்து பள்ளிக்கு உள்ளே செல்ல வேண்டும்.

அதேபோல, பள்ளி முடிந்து வெளியே செல்லும்போதும் சாலையை கடக்கும் நிலை உள்ளது. அவ்வாறு சாலையை மாணவியர் கடக்கும்போது, வாகனங்கள் அதிகமாக செல்வதால் சிரமப்படுகின்றனர்.

மேலும், சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் மோதி மாணவியர் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, பள்ளி நேரத்தில் போக்குவரத்து போலீசாரை நியமித்து, மாணவியர் தடையின்றி செல்ல, உரிய நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us