ADDED : ஜன 30, 2024 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:சென்னை, எருக்கஞ்சேரி, சர்மா நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கார்த்திக், 21. வேல்டெக் கல்லுாரியில், பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் ஜெயலலிதா, 19 . திருவள்ளூர் அருகே, ஸ்ரீராம் பாலிடெக்னிக்கில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை இருவரும் பைக்கில், ஊத்துக்கோட்டை தண்டலம் அருகே சென்றபோது, பைக் நிலை தடுமாறி, டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.