/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பஸ்சில் இருந்து விழுந்த பெண் பயணி வழிவிடாமல் மாணவர்கள் அட்டகாசம்
/
பஸ்சில் இருந்து விழுந்த பெண் பயணி வழிவிடாமல் மாணவர்கள் அட்டகாசம்
பஸ்சில் இருந்து விழுந்த பெண் பயணி வழிவிடாமல் மாணவர்கள் அட்டகாசம்
பஸ்சில் இருந்து விழுந்த பெண் பயணி வழிவிடாமல் மாணவர்கள் அட்டகாசம்
ADDED : ஜூலை 14, 2025 12:25 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாதில் இருந்து, அவளூர் வழியாக அரசு பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள், ஆபத்தை உணராமல் பேருந்து படியில் தொங்குவதால், பேருந்தில் பயணிக்கும் மற்ற பயணியருக்கு இடையூறு மற்றும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் வழியாக தடம் எண் டி86 அரசு பேருந்து, அவளூர் கூட்டுச்சாலை, கணபதிபுரம், தம்மனுார், கம்மராஜபுரம், வள்ளிபுரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக இளையனார்வேலுார் வரை இயங்குகிறது.
இந்த கிராமங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் ஏராளமான மாணவ - மாணவியர் இப்பேருந்து மூலம் பயணித்து, வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள கல்விக்கூடங்களுக்கு செல்கின்றனர்.
அவ்வாறு பேருந்தில் பயணம் செய்யும்போது, மாணவர்கள் படியில் தொங்கி ஆபத்தான பயணம் செய்து, எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவதாக பயணியர் பலரும் புலம்புகின்றனர்.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியாவது,
பேருந்துகளில் கூட்டம் குறைவாக இருந்தாலும்கூட பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணிக்கின்றனர். நடத்துநர் மற்றும் ஓட்டுநர் கேட்கும்போது அவர்களிடம் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
பேருந்து படியில் தொங்கியபடி, தலையை வெளியே நீட்டியும், கால்களை தரையில் படும்படியும் சாகசம் செய்து, மற்றவர்களை அச்சமுறச் செய்கின்றனர்.
குறிப்பாக, பள்ளி முடியும் மாலை நேரத்தில் இத்தகைய செயல்பாடு அதிகம் உள்ளது.
மூன்று தினங்களுக்கு முந்தைய மாலை நேரத்தில், வாலாஜாபாதில் இருந்து, பாலாற்று வழியாக அவளூர் நோக்கி சென்ற பேருந்தில், படியில் தொங்கிய மாணவர்களால் பெண் ஒருவர்பேருந்தின் உள்ளே செல்ல முடியாமல் கீழே விழுந்து பாதிப்பிற்கு உள்ளானார்.
எனவே, வாலாஜாபாத் - இளையனார்வேலுார் இடையில் பயணிக்கும் அரசு பேருந்தை வழித்தடங்களில் போலீசார் கண்காணித்து, பேருந்து படியில் தொங்கியும், கூச்சலிட்டும் இடையூறு செய்யும் மாணவர்களை எச்சரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.