sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 110 பேருக்கு சான்றிதழ் வழங்கல்

/

கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 110 பேருக்கு சான்றிதழ் வழங்கல்

கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 110 பேருக்கு சான்றிதழ் வழங்கல்

கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 110 பேருக்கு சான்றிதழ் வழங்கல்


ADDED : ஏப் 28, 2025 01:10 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், கோடை கால நீச்சல் பயிற்சி முகாம், கடந்த 1ம் துவங்கியது. முதற்கட்ட பயிற்சியை நிறைவு செய்த 30 பேருக்கு, 13ம் தேதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம், கடந்த 15ம் தேதி துவங்கி, நேற்று நிறைவு பெற்றது. இரண்டாம் கட்ட முகாமில், நீச்சல் பயிற்சியை நிறைவு செய்த 110 பேருக்கு சான்றிதழ் வழங்கும் விழா, மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி சான்றிதழ் வழங்கினார்.

மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் நாளை துவங்கி, மே 11ம் தேதி வரையும், நான்காம் கட்ட பயிற்சி, மே 13 முதல், 25ம் தேதி வரையும், பயிற்சி முகாம் நிறைவாக, ஐந்தாவது கட்டமாக மே 27 முதல், ஜூன் 8ம் தேதி நடக்கிறது.

தினமும், காலை 6:00 மணி முதல், 9:00 மணி வரையிலும், மாலை 3:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில், திங்கட்கிழமை விடுமுறை. தங்களுக்கு உகந்த ஒரு மணி நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம்.

பயிற்சி கட்டணம் 1,770 ரூபாய், மேலும் விபரங்களுக்கு 77085 43350, 74017 03481ஆகிய எண்களில் கொள்ளலாம். முதற்கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு நாளை சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us