/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோடை கால நீச்சல் பயிற்சி முகாம்
/
கோடை கால நீச்சல் பயிற்சி முகாம்
ADDED : ஏப் 14, 2025 12:44 AM

காஞ்சிபுரம்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், கோடை கால நீச்சல் பயிற்சி முகாம், கடந்த 1ம் துவங்கியது. இதில், 30 பேர் பங்கேற்றனர். முதற்கட்ட பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.
நீச்சல் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி சான்றிதழ் வழங்கினார்.
இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம், நாளை துவங்கி, வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட பயிற்சி ஏப்., 29ம் தேதி முதல், மே 11ம் தேதி வரையும், நான்காம் கட்ட பயிற்சி மே 13ம் தேதி முதல், 25ம் தேதி வரையும், பயிற்சி முகாம், நிறைவாக, ஐந்தாவது கட்டமாக மே 27ம் தேதி முதல் ஜூன் 8ம் தேதி வரையும் நடக்கிறது.
தினமும், காலை 6:00 - 9:00 மணி வரையிலும், மாலை 3:00 - 6:00 மணி வரை நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில், திங்கட்கிழமை விடுமுறை. தங்களுக்கு உகந்த ஒரு மணி நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம். பயிற்சி கட்டணம் 1,770 ரூபாய்.
மேலும், விபரங்களுக்கு 77085 43350, 74017 03481 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். முதற்கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு நாளை சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார்.

