ADDED : மார் 20, 2024 12:15 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் வாரியங்களின் திட்டப்பிரிவு பொறியாளராக இருந்த சுந்தரராஜன், காஞ்சிபுரம் வடக்கு உதவி மின் கோட்ட பொறியாளர் பதவியை கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
சென்னை சென்ட்ரல் உதவி செயற்பொறியாளராக இருந்த பாண்டியராஜன் என்பவர், பதவி உயர்வு பெற்று, காஞ்சிபுரம் வடக்கு கோட்ட பொறியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, மின் வாரிய அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
