/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
ADDED : பிப் 04, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம் : ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு, உடல் சிதைந்த நிலையில் ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், இறந்தது திருநெல்வேலி மாவட்டம், பாதமண்டப கிராம தாலுகாவைச் சேர்ந்த நாகூர் மீரான், 39, என்பதும், தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது, தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.