sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் தேர் திருவிழாவுக்கு 5 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்; பாதுகாப்புக்கு 1,000 போலீசார்

/

காஞ்சியில் தேர் திருவிழாவுக்கு 5 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்; பாதுகாப்புக்கு 1,000 போலீசார்

காஞ்சியில் தேர் திருவிழாவுக்கு 5 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்; பாதுகாப்புக்கு 1,000 போலீசார்

காஞ்சியில் தேர் திருவிழாவுக்கு 5 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்; பாதுகாப்புக்கு 1,000 போலீசார்


ADDED : மே 15, 2025 08:35 PM

Google News

ADDED : மே 15, 2025 08:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாக்களான கருடசேவை உற்சவம் முடிந்த நிலையில், நாளை தேர் உற்சவம் நடைபெற உள்ளது.

இதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம், போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், ஊர்க்காவல் படை, போலீசார் என, 1,000 பேர், எஸ்.பி.,சண்முகம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். காவல்துறை உதவி மையங்கள், குடிநீர் தொட்டிகள், தற்காலிக கழிப்பறை, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காலை 6:00 மணிக்கு தேர் புறப்பட்டு வீதியுலா சென்று மீண்டும், மாலை 5:00 மணிக்கு நிலைக்கு தேர் வந்தடையும். அப்போது, பக்தர்கள் தேர் மீது ஏறி சுவாமி தரிசனம் செய்யலாம் எனவும், அதற்கு முன்பாக தேர் மீது ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை என, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, காஞ்சிபுரம் நகரில் தேர் திருவிழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் நகரில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம், காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை செயல்படும் என, காவல் துறை தெரிவித்துள்ளது.

பேருந்துகள் செல்லும் வழித்தடம் தற்காலிக பேருந்து நிலையம் அமையும் இடங்கள்


1. சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் புதிய ரயில் நிலையம்
2. வேலுார், திருத்தணி, திருப்பதி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் ஒலிமுகமதுபேட்டை சந்திப்பு
3. தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பழைய ரயில் நிலையம்
4. உத்திரமேரூர், மதுராந்தகம் செல்லும் பேருந்துகள் ஓரிக்கை சந்திப்பு5. வந்தவாசி, செய்யாறு செல்லும் பேருந்துகள் கலெக்டர் வளாகம்








      Dinamalar
      Follow us